Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி மீது 'போக்சோ'

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி மீது 'போக்சோ'

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி மீது 'போக்சோ'

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி மீது 'போக்சோ'

ADDED : ஜூன் 20, 2024 08:31 PM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுவனிடம் பாலியல் தொல்லை அளித்தவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் அன்புராஜ், 35; கூலித் தொழிலாளி. திருமணமானவர். இவர், நேற்று முன்தினம் இரவு, 13 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், அன்புராஜ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us