/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா
அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா
அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா
அச்சிரம்பட்டு கோவிலில் செடல் திருவிழா
ADDED : ஜூன் 19, 2024 11:08 PM
வானுார் : அச்சிரம்பட்டு செல்லியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, செடல் உற்சவம் நடந்தது.
வானுார் அடுத்த அச்சிரம்பட்டு கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உற்சவ விழா கடந்த 17ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், பொங்கல் வைத்து படையல் நடந்தது.
தொடர்ந்து செடல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் அலகு குத்தி, வாகனங்கள் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு செல்லியம்மன் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.