ADDED : ஜூலை 13, 2024 12:06 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிளஸ் 2 மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தயாளன் மகள் திவ்யா,17; இவர், மாம்பழபட்டு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற திவ்யா காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து, காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.