ADDED : ஜூலை 22, 2024 01:29 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் மோதி மூதாட்டி இறந்தார்.
விழுப்புரம், கொளத்துார் அருகே ராமானுஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஞ்சாலி, 64; இவர், நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில் பேரங்கியூர் அருகே அவரது உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பினார். பேரங்கியூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சாலையை கடக்கும் போது திருச்சி - சென்னை நோக்கி வந்த கார் இவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.