/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டவரிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி டவரிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
டவரிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
டவரிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
டவரிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
ADDED : ஜூலை 12, 2024 11:10 PM
விழுப்புரம்: மேற்குவங்க மாநிலம், பழைய மால்டா அடுத்த மலப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கெத்தபுல்ஷேக் மகன் மகிதூர்ஷேக்,40; அவரது உறவினர் மணிகுல்ஷேக்,40; இவர்கள் இருவரும், கடந்த 6 மாதங்களாக, தமிழகத்தில் உள்ள தனியார் கம்பெனியில் மின் டவர் அமைக்கும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், விழுப்புரம் அடுத்த, வளவனூர் மின் வாரிய அலுவலகம் அருகே நடந்து வரும் மின் வாரியத்தின் 40 அடி டவரில் ஏறியபடி மகிதூர்ஷேக் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் தவறிவிழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.