ADDED : ஜூன் 15, 2024 06:12 AM
விழுப்புரம்: மனைவியைத் தாக்கிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா, 33; நகைக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜ லட்சுமி,32; திருமணமாகி 2 ஆண்டாகும் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி ராஜா, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை ராஜலட்சுமி கண்டித்தார். ஆத்திரமடைந்த ராஜா, ராஜலட்சுமியை தாக்கி, கூடுதலாக வரதட்சணை கேட்டு தாய் வீட்டிற்கு விரட்டியுள்ளார்.
இதுகுறித்து, ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, ராஜாவை தேடிவருகின்றனர்.