Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வக்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் தரிசனம்

வக்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் தரிசனம்

வக்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் தரிசனம்

வக்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் தரிசனம்

ADDED : ஜூலை 06, 2024 05:16 AM


Google News
Latest Tamil News
வானுார்: அமாவாசையையொட்டி நேற்று திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு, பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவக்கரை வக்ரகாளியம்மன் மற்றும் சந்திரமவுலீஸ்வரர் கோவில்களில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பவுர்ணமியன்று ஜோதி ஏற்றப்படுவது வழக்கம்.

இதனை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவர்.

வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினமான நேற்று திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஏரளமான பக்தர்கள் திரண்டனர்.

வெகு நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் பணியாற்ற முகாமிட்டுள்ள பல்வேறு கட்சி முக்கிய நிர்வாகிகளும், கடந்த சில தினங்களாக வக்ரகாளியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகின்னர்.

நேற்று அமாவாசை தினத்தையொட்டி பா.ஜ., தலைவர் அண்ணாமலை காலை 10:45 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து 11:30 மணிக்கு, அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ., நந்தகுமாரும், 12:15 மணிக்கு அமைச்சர் சேகர் பாபுவும் சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us