ADDED : ஜூன் 25, 2024 07:10 AM

விழுப்புரம், : வளவனுார் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் உலக நன்மைக்காக சிறப்பு தியானம் நடந்தது.
மாதேஸ்வரி ஜகதம்பா சரஸ்வதியின் 59வது நினைவு நாளையொட்டி, வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் உலக நன்மைக்காக சிறப்பு தியானம் நடந்தது.
நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடந்த தியானத்தில், பக்தர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.