Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாத்தனந்தல் விநாயகர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா

சாத்தனந்தல் விநாயகர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா

சாத்தனந்தல் விநாயகர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா

சாத்தனந்தல் விநாயகர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேக விழா

ADDED : ஜூன் 08, 2024 04:53 AM


Google News
செஞ்சி : சாத்தனந்தல் சித்தி விநாயகர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

செஞ்சி அடுத்த சாத்தனந்தல் கிராமத்தில் புதிதாக கட்டியுள்ள சித்தி விநாயகர், பாலமுருகன், பார்வதி சமேத கண்டேஸ்வரர், விஷ்ணு துர்கை, தட்சணாமூர்த்தி, கால பைரவர், ஐயப்பன், ஹயக்ரீவர், பிரம்மா, ஆஞ்சநேயர் மற்றும் நவகிரக கோவில்களுக்கு நாளை 9ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விழா கடந்த 6ம் தேதி மாலை மகா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது.

நேற்று காலை விக்கிரகங்கள் கரிக்கோல ஊர்வலமும், மாலை விக்னேஸ்வரர் பூஜையும், பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.

இரவு கோபுர கலசங்கள் மற்றும் சுவாமி விக்ரகங்கள் அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இன்று 8ம் தேதி காலை 6:30 மணிக்கு கோபூஜை, வேத பாராயணம், 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.

நாளை 9ம் தேதி 5:00 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 7:00 மணிக்கு கடம் புறப்படாகி, 8:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூலவர் பரிவார தெய்வங்கள் மகா அபிஷேகமும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us