Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நெல் மூடைகளுடன் கிணற்றில் கவிழ்ந்த லாரி

நெல் மூடைகளுடன் கிணற்றில் கவிழ்ந்த லாரி

நெல் மூடைகளுடன் கிணற்றில் கவிழ்ந்த லாரி

நெல் மூடைகளுடன் கிணற்றில் கவிழ்ந்த லாரி

ADDED : மார் 13, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
செஞ்சி:செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டையுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, மண் சரிவு ஏற்பட்டு கிணற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல் மூட்டைகள், செஞ்சி மார்க்கெட் கமிட்டி குடோனில் சேமித்து வைக்கின்றனர். அதன்படி, 10க்கும் மேற்பட்ட லாரிகளில் நெல் மூட்டைகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்தனர்.நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு மூட்டை இறக்கும் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட கூலி பிரச்னையால் நெல் மூட்டைகளை இறக்காமல் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் ஒரு வாரமாக நிறுத்தி இருந்தனர். நேற்று முன்தினம் உடன்பாடு ஏற்பட்டு ஒரு பகுதி லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கினர். மீதம் இருந்த லாரிகளை மார்க்கெட் கமிட்டியில் நிறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், 40 கிலோ எடை கொண்ட 600 நெல் மூட்டைகளுடன் மார்கெட் கமிட்டியில் உள்ள கிணற்று அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி, நேற்று காலை 8:30 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டு சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு கிணற்றில் கவிழ்ந்தது. இதில் பாதியளவு நெல் மூட்டைகள் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்தது.

நேற்று மாலை கிரேன் உதவியுடன் லாரியை கிணற்றில் இருந்து மீட்டனர். லாரி கவிழ்த்த போது கிணற்றையொட்டி இருந்த மின் கம்பமும் உடைந்து விழுந்தது. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

இதில், 5 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதமானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us