Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு 'குண்டாஸ்'

மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு 'குண்டாஸ்'

மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு 'குண்டாஸ்'

மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு 'குண்டாஸ்'

ADDED : ஜூன் 23, 2024 05:45 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த ரோஷணை, போலன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மணிமாறன் என்கிற ராஜ்குமார், 35; இவர், கடந்த மே 16ம் தேதி திண்டிவனம் - செஞ்சி சாலையருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் மற்றும் மாமூல் கேட்டு பணியிலிருந்த சீனுவாசனை கத்தியால் தாக்க முயன்றார்.

இது குறித்து மணிமாறன் மீது ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். இவர் மீது மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் பழனி நேற்று அளித்த உத்தரவின் பேரில் மணிமாறனை, ரோஷணை போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us