Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போலீசை மிரட்டிய போதை நபர் கைது

போலீசை மிரட்டிய போதை நபர் கைது

போலீசை மிரட்டிய போதை நபர் கைது

போலீசை மிரட்டிய போதை நபர் கைது

ADDED : ஜூன் 16, 2024 06:33 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீஸ்காரரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டிய போதை நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், குருசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 37; அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் வசந்த், 24; இருவரும் நேற்று முன்தினம் அதே பகுதியில் குடிபோதையில் தாக்கிக் கொண்டனர்.அப்போது அங்கிருந்த விழுப்புரம் போக்குவரத்து போலீஸ்காரர் பெருமாள், 34; இருவரையும் தடுத்தார். அதில், ஆத்திரமடைந்த வசந்த், பெருமாள் சட்டையை பிடித்து திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், வழக்குப் பதிந்து வசந்த்தை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us