ADDED : ஜூன் 16, 2024 06:33 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீஸ்காரரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டிய போதை நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், குருசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 37; அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் வசந்த், 24; இருவரும் நேற்று முன்தினம் அதே பகுதியில் குடிபோதையில் தாக்கிக் கொண்டனர்.அப்போது அங்கிருந்த விழுப்புரம் போக்குவரத்து போலீஸ்காரர் பெருமாள், 34; இருவரையும் தடுத்தார். அதில், ஆத்திரமடைந்த வசந்த், பெருமாள் சட்டையை பிடித்து திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், வழக்குப் பதிந்து வசந்த்தை கைது செய்தனர்.