Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மனைவி மீது தாக்குதல் கணவர் கைது

மனைவி மீது தாக்குதல் கணவர் கைது

மனைவி மீது தாக்குதல் கணவர் கைது

மனைவி மீது தாக்குதல் கணவர் கைது

ADDED : மார் 14, 2025 04:58 AM


Google News
விழுப்புரம்: மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த வேட்டப்பூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சந்திரசேகரன், 38; கட்டட தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி, 36; இவர்களுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டு தனலட்சுமி தனது தாய் வீடான சாலாமேடுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி சாலாமேடுக்கு சென்ற சந்திரசேகரன், மனைவியை சமாதானப்படுத்தி, பைக்கில் அழைத்து வந்தார்.

அப்போது, வழியில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், தனலட்சுமியை கடுமையாக தாக்கியதில், பலத்த காயமடைந்த தனலட்சுமி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, சந்திரசேகரனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us