Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

திருவக்கரை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

ADDED : மார் 15, 2025 06:42 AM


Google News
வானுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வக்ரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர், வரதராஜ பெருமாள், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

நள்ளிரவு 12:00 மணிக்கு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறநியைத்துறை செயல் அலுவலர் ஜெயக்குமார், உதவி ஆணையாளர் சக்திவேல், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us