Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை

மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை

மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை

மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை

ADDED : ஜூலை 04, 2024 12:46 AM


Google News
விழுப்புரம், : திருமணமாகாத விரக்தியில் மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகள் பிரியா, 41; இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த 1ம் தேதி அதிகளவு பி.பி., மாத்திரைகளை போட்டுக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றார்.

இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us