Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

ADDED : ஆக 02, 2024 01:06 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 45; விவசாயி. கோழிப்பண்ணை உரிமையாளர். இவரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது குறித்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ஜெயச்சந்திரன், மூன்று தவணைகளாக ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம் அனுப்பி வைத்தார். அதன்பிறகு, டிரேடிங் பணத்தை எடுக்க முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us