Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு கல்லுாரியில் நாளை கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் நாளை கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் நாளை கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் நாளை கலந்தாய்வு

ADDED : ஜூலை 02, 2024 11:18 PM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில், இளநிலை பட்ட படிப்புகளுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு சுழற்சி 1, 2 நாளை 4ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் அரசு கலை கல்லுரியில் இந்தாண்டிற்கான சிறப்பு கலந்தாய்வு பி.எஸ்சி., கணிதம் சுழற்சி 1,2, பி.எஸ்சி., புள்ளியியல் சுழற்சி 1 மற்றும் அறிவியல் தொழில் பிரிவு பயின்று பி.ஏ., விண்ணப்பித்தோருக்கும் நாளை 4ம் தேதி காலை 10.00 மணிக்கு கலந்தாய்வு நடக்கிறது.

நாளை பி.எஸ்சி., கணிதம் சுழற்சி 1க்கு தகுதி மதிப்பெண்கள் 288 முதல் 210 வரையிலும், கணிதம் சுழற்சி 2க்கு தகுதி மதிப்பெண் 260 முதல் 210 வரை நடக்கிறது. பி.எஸ்சி., புள்ளியியல் சுழற்சி 1க்கு தகுதி மதிப்பெண் 288 முதல் 180 வரையிலும், பி.ஏ., வரலாறு, பொருளியல், அறிவியல் தொழில் பிரிவு சுழற்சி 1க்கு தகுதி மதிப்பெண் 369 முதல் 280 வரை நடைபெறுகிறது. பி.ஏ., வரலாறு, பொருளியல், அறிவியல் தொழில் பிரிவு சுழற்சி 2க்கு தகுதி மதிப்பெண் 347 முதல் 280 வரை நடக்கிறது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்போர், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலின் அசல் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், பாஸ்போர்ட் போட்டோ 3, பெற்றோர் அல்லது பாதுகாவலர் போட்டோ 1, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் 1, ஆதார் நகல் 2, உரிய சேர்க்கை கட்டணம் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

இத்தகவலை கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us