ADDED : ஆக 03, 2024 11:59 PM
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அடுத்த வடபாலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து, நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தாசில்தார் முகமது அலி, பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமத், துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் கலா, காசியம்மாள், ஊராட்சி தலைவர் சங்கீதா சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.