Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ADDED : ஜூலை 25, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
செஞ்சி: செஞ்சி அடுத்த கடலாடிகுளம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 2ம் கட்ட முகாம் நடந்தது.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் முகுந்தன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றி பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

முகாமில், குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ., சீத்தாலட்சுமி, ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர்கள் பச்சையப்பன், டிலைட் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

முகாமில் 15 அரசுத் துறையினர் முகாமிட்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்று உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us