Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு

துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு

துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு

துணை தலைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப் பதிவு

ADDED : ஜூன் 05, 2024 10:58 PM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் குடும்பத்தினரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த எல்.ஆர்.பாளையம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 50; இவரது மனைவி ஜெயகவுரி, 45; ஊராட்சி துணைத் தலைவர். இவரது குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தேசிங்கு மகன் சசிகுமார், 35; குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை ராமமூர்த்தி மகன் தினேஷ், 25; சசிகுமார் மனைவி வனிதாவிடம், 32; பேசியுள்ளார்.

இதனால், சசிக்குமார் மற்றும் குடும்பத்தினர் தினேஷை திட்டி, தாக்கினர். தடுத்த ராமமூர்த்தி, ஜெயகவுரி ஆகியோரையும் தாக்கினர்.

ஜெயகவுரி அளித்த புகாரின் பேரில், சசிகுமார், அவரது உறவினரான மணிகண்டன், கண்ணதாசன், சசிதரன் ஆகியோர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us