/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
ADDED : மார் 14, 2025 05:07 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டு மனை பிரச்னையில் முதியவரை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி,72; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி,45; ரவியின் வீட்டு அருகே உள்ள மனையில் 2 அடி கலியமூர்த்திக்கு சொந்தம் இருந்ததால், இவர்களுக்குள் பிரச்சனை இருந்தது.
இதை மனதில் வைத்துக் கொண்டு கடந்த 6ம் தேதி ரவியை, கலியமூர்த்தி, இவர் மனைவி கலா, மகன் சண்முகம் ஆகியோர் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். விழுப்புரம் மேற்கு போலீசார் கலியமூர்த்தி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.