Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காதலியை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை

காதலியை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை

காதலியை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை

காதலியை ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை

ADDED : ஜூன் 19, 2024 01:29 AM


Google News
விழுப்புரம் : காதலியை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் விஜயகீர்த்தி மகன் வினோத்,24; இவர், கடந்த 2019ம் ஆண்டு 23 வயது பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண், திருமணம் செய்து கொள்ளு மாறு கேட்டதற்கு வினோத் மற்றும் அவரது தந்தை விஜயகீர்த்தி, தாய் வள்ளி ஆகியோர் அந்த பெண்ணை ஜாதி பெயரை கூறி திட்டி, திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வினோத் உள்ளிட்ட மூவரை கைது செய்த விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யஜோதி, காதலியை ஏமாற்றிய வினோத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற இருவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us