Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பழுதாகி நின்ற மினி சரக்கு வேனில் கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

பழுதாகி நின்ற மினி சரக்கு வேனில் கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

பழுதாகி நின்ற மினி சரக்கு வேனில் கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

பழுதாகி நின்ற மினி சரக்கு வேனில் கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

ADDED : ஜூன் 30, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
வானுார் : ஆரோவில் அருகே புறவழிச்சாலையில் நின்றிருந்த மினி சரக்கு வேனில், மினி கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.

வானுாரைச் சேர்ந்தவர் கவியரசன், 33; இவர் திருமணம், பிறந்த நாள் போன்ற விழாக்களில் டெக்ரேஷன் அமைத்து கொடுத்து வருகிறார். இவரிடம் வானுார் அம்பேத்கர் வீதியை சேர்ந்த கோவிந்தன் மகன் அர்ஜூன், 19; வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வானுார் அடுத்த ராவுத்தன்குப்பம் பகுதியில் ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் டெக்கரேஷன் செய்தவர் நிகழ்ச்சி முடிந்ததும், டெக்ரேஷன் பொருட்களை தனக்கு சொந்தமான மினி சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு இரும்பையில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.

அவருடன், அர்ஜூன், இரும்பை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சஞ்சய், 18; அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ், 18; சரத், 15; ஆகிய 4 பேரும் சென்றனர்.

திண்டிவனம் - புதுச்சேரி புறவழிச் சாலையில், இரவு 11:30 மணிக்கு சென்றபோது, திடீரென மினி சரக்கு வேன் நின்றது. சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த மினி கன்டெய்னர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் அர்ஜூன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கவியரசன், சஞ்சய், ஆரோக்கியராஜ், சரத் ஆகிய நால்வரும் காயமடைந்தனர். உடன் காயமடைந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் மினி கன்டெய்னர் டிரைவர் காயமின்றி தப்பினார்.

புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us