Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆக்கிரமிப்பை அகற்ற 7 நாள் அவகாசம்

ஆக்கிரமிப்பை அகற்ற 7 நாள் அவகாசம்

ஆக்கிரமிப்பை அகற்ற 7 நாள் அவகாசம்

ஆக்கிரமிப்பை அகற்ற 7 நாள் அவகாசம்

ADDED : ஆக 02, 2024 02:07 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கட்டட ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் ரமேஷ் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்களில் முன்பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்தும், தரைப்பகுதி, சாலைப்பகுதி பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் 7 நாட்களுக்குள் தாங்களே அகற்றிக் கொள்ள, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகளின் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறினால், நகராட்சி பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி, இருமடங்கு செலவின தொகையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us