Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கோவில் விழாவில் பட்டாசு வெடித்து 6 பேர் காயம்

கோவில் விழாவில் பட்டாசு வெடித்து 6 பேர் காயம்

கோவில் விழாவில் பட்டாசு வெடித்து 6 பேர் காயம்

கோவில் விழாவில் பட்டாசு வெடித்து 6 பேர் காயம்

ADDED : ஜூன் 16, 2024 06:39 AM


Google News
மயிலம்: மயிலம் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்தனர்.அப்போது, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து.

இதில், அங்கிருந்த சக்திவேல் மகன்கள் கவியழகன், 7; தமிழழகன், 5; சுப்ரமணியன் மகன் கவுஷிக், 7; காளி மகன் அன்பு, 10; சிவமூர்த்தி மகன் உதயா, 7; மற்றும் எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன், 47; ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடன் அனைவரும் திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். உதயா மட்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us