Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது 

வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது 

வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது 

வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது 

ADDED : ஜூன் 08, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம் : திண்டிவனத்தில் விவசாயியை தாக்கி வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமானுஜம், 39; கொத் தனார். இவர் கடந்த 31ம் தேதி மாலை திண்டிவனம், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வந்தபோது, ரோஷணையைச் சேர்ந்த கிடங்கலான் என்கிற சரண்ராஜ், 38; மற்றும் உடன் வந்த இரண்டு பேர், ராமானுஜத்தை இரும்பு ராடால் தாக்கி, அவரிடமிருந்து மொபைல் போன், பைக்கையும் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து, கிடங்கலான் என்கிற சரண்ராஜ், அவரப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், 30; விஜய், 21; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சந்தைமேடு பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us