/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திண்டிவனம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு திண்டிவனம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
திண்டிவனம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
திண்டிவனம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
திண்டிவனம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 23, 2024 05:52 AM
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் நாளை 24ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.
திண்டிவனம் அரசு கலைக்கல்லுாரியில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலை பட்ட படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு நாளை 24ம் தேதி நடக்கிறது.
இதில், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், புள்ளியல் பாடங்களுக்கு நடக்கிறது. 25ம் தேதி பி.காம்., மற்றும் பி.பி.ஏ., (வணிக நிர்வாகவியல்) பாடத்திற்கும், 26ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவிற்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இத்தகவலை கல்லுாரியின் முதல்வர் (பொறுப்பு) நாராயணன் தெரிவித்துள்ளார்.