ADDED : ஜூன் 12, 2024 11:46 PM

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் சஷ்டியை முன்னிட்டு காலை 6;00 மணிக்கு சுவாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாரதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் 12:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது.
இரவு 9:00 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கபட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார்.