Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்க காசுகளில் உடை

வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்க காசுகளில் உடை

வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்க காசுகளில் உடை

வேலுார் நாராயணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு 1,000 தங்க காசுகளில் உடை

ADDED : ஜூலை 02, 2024 11:08 AM


Google News
வேலுார்: வேலுார், நாராயணி அம்மன் தங்க கோவிலில், லலிதா சகஸ்ர நாம மஹா யாகம், 1,000 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு விழாவில், மஹாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ எடைகொண்ட, 1,000 தங்க காசுகளால் ஆன பாவாடை அணிவிக்கப்பட்டது.

வேலுார் மாவட்டம், அரியூர் தங்க கோவிலில், நாராயணி அம்மன் கோவிலில் கடந்த, 2021 அக்., 6 ம் தேதி துவங்கப்பட்டு, லலிதா சகஸ்ர நாமம் மஹா யாகம், 3 ஆண்டுகளாக, 1,000 நாட்கள் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று நிறைவு நாள் விழா நடந்தது. நிகழ்ச்சியில் சக்தி அம்மா சிறப்பு பூஜை நடத்தினார். இதில், மகாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ தங்கத்திலான, 1,000 தங்க காசுகள் கொண்ட தங்கப் பாவாடை அம்மனுக்கு சாத்தப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us