Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி

டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி

டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி

டூ-வீலர்கள் மோதி விபத்து பெண் உட்பட இருவர் பலி

ADDED : ஜூன் 01, 2025 02:54 AM


Google News
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி, 63. இவர், நேற்று மாலை தன், 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூ-வீலரில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் இருந்து வாலிகண்டபுரம் வந்துவிட்டு, பின்னர் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த அதியமான், 18, என்பவர் டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., டூ-வீலரில், தன் தாய் மஞ்சுளா, 45, உடன் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இருவரின் டூ-வீலரும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், அய்யாசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அதியமான், மஞ்சுளா சிகிச்சைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us