Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ டிப்பர் மோதி பலியானவர் மீது மண்ணை கொட்டிய கொடூரம்

டிப்பர் மோதி பலியானவர் மீது மண்ணை கொட்டிய கொடூரம்

டிப்பர் மோதி பலியானவர் மீது மண்ணை கொட்டிய கொடூரம்

டிப்பர் மோதி பலியானவர் மீது மண்ணை கொட்டிய கொடூரம்

ADDED : ஜூன் 28, 2025 06:47 AM


Google News
துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள சின்னராக்கம்பட்டியில் உள்ள ராக்கன்குளத்தை துார்வாரும் பணி நடக்கிறது. டிப்பர் லாரி மற்றும் ஹிட்டாச்சி கனரக இயந்திரம் மூலம் குளத்தில் மண் அள்ளப்பட்டு, கரைகளில் கொட்டி, பலப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை கார்த்திக் என்பவர், டிப்பர் லாரியில் மண் ஏற்றி வந்து கரையில் கொட்டும் போது, அவரது டிப்பர் லாரி டயரில், ரத்தம் இருந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து, மண் கொட்டிய இடத்தில் பார்த்தபோது, அதே ஊரைச் சேர்ந்த சின்னப்பா, 32, என்ற விறகு வியாபாரி தலை நசுங்கி இறந்து கிடந்தார்.என்பது தெரிந்தது.

வளநாடு போலீசார் விசாரணையில், டிப்பர் லாரி டிரைவர் கார்த்திக், மண் கொட்ட பின்னால் வந்தபோது, குளக்கரையில் நின்றிருந்த சின்னப்பாவை கவனிக்காமல், அவர் மீது லாரி ஏறி தலை நசுங்கியுள்ளது.

இதை அறியாமல் அவர் உடல் மீது மண்ணையும் கொட்டியது தெரிந்தது. வளநாடு போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us