Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

ADDED : ஜூன் 03, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டியில், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இந்த கிராமத்துக்கு பள்ளி நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ், கோடை விடுமுறையில் நிறுத்தப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், இந்த கிராமத்துக்கு மீண்டும் பஸ் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், கீழகோட்டாம்பட்டியைச் சேர்ந்த, 21 மாணவ - மாணவியர் இந்த பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையிலும், போக்குவரத்து வசதிக்காகவும், இந்த பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து, வேன் ஏற்பாடு செய்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவ - மாணவியரை, அந்த வேனில் அழைத்து வந்து, இனிப்பு கொடுத்து வரவேற்றனர். அமைச்சர் மகேஷின் சொந்த மாவட்டத்தில், பஸ் வசதியின்றி தவித்த பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் சொந்த செலவில் வாகன வசதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us