Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ விபத்தில் தீப்பிடித்த எலக்ட்ரிக் பஸ் லாரி டிரைவர்களால் தப்பிய 21 பேர்

விபத்தில் தீப்பிடித்த எலக்ட்ரிக் பஸ் லாரி டிரைவர்களால் தப்பிய 21 பேர்

விபத்தில் தீப்பிடித்த எலக்ட்ரிக் பஸ் லாரி டிரைவர்களால் தப்பிய 21 பேர்

விபத்தில் தீப்பிடித்த எலக்ட்ரிக் பஸ் லாரி டிரைவர்களால் தப்பிய 21 பேர்

ADDED : ஜூன் 30, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
கருமத்தம்பட்டி: கோவை அருகே நள்ளிரவில் மேம்பால தடுப்பு சுவரில் மோதிய எலக்ட்ரிக் பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது. பஸ்சுக்குள் சிக்கிய 21 பயணியரை, லாரி டிரைவர்கள் கண்ணாடியை உடைத்து உரிய நேரத்தில் மீட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருச்சியில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு புறப்பட்ட தனியார் எலக்ட்ரிக் பஸ், திருப்பூர், அவிநாசி வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.

டிரைவர், கண்டக்டர் உட்பட, 26 பயணியர் இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்த டிரைவர் பசுபதி, 29, பஸ்சை ஓட்டினார்.

அவிநாசி ரோட்டில், கருமத்தம்பட்டி அடுத்த தனியார் பள்ளி அருகே மேம்பாலத்தில் நள்ளிரவு, 2:30 மணிக்கு வந்தபோது, மேம்பால தடுப்பு சுவர் மீது பஸ் மோதி, தீப்பிடித்து எரியத் துவங்கியது. பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்ததால், கதவை திறக்க முடியவில்லை.

அந்த நேரம், அவ்வழியே சென்ற லாரி டிரைவர்களான விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை சேர்ந்த சபரிமலை, 29, ரமேஷ், 29 ஆகியோர் விபத்தை பார்த்து, உடனே பஸ் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, பஸ்சுக்குள் தவித்த பயணியரை விரைவாக மீட்டனர்.

தீப்பற்றிய பஸ்சில் இருந்து, பயணியர் அனைவரும் மீட்கப்பட்டதால், அவர்கள் தீக்காயமின்றி தப்பினர்.

இந்த தீ விபத்தில் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதால், இரு லாரி டிரைவர்களையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த போலீசார், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, கவுரவப்படுத்தினர்.

அதே நேரம் பால தடுப்பு சுவரில் மோதியதில் காயமடைந்த பயணியர் 21 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கருமத்தம்பட்டி போலீசார் மற்றும் சூலுார் தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us