Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்

முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்

முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்

முக்கொம்பு அணைக்கு வந்த காவிரி நீர்

ADDED : ஜூலை 30, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
திருச்சி:மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், நேற்று, திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அதனால், இன்று முதல் கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

கர்நாடகா மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதாலும், அங்குள்ள அணைகள் நிரம்பியதாலும், அங்கிருந்து தமிழகத்துக்கு 1.47 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று அணை முழு கொள்ளளைவை எட்டியது.

ஏற்கனவே, தமிழக முதல்வர் உத்தரவுப்படி, கடந்த 28 ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர், நாமக்கல், கரூர் மாவட்டங்களை கடந்து, நேற்று மதியம், திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையை வந்தடைந்தது.

முக்கொம்பு மேலணைக்கு வந்த தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு, கல்லணைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம், இன்று காலை , கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us