Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ கல்லுாரி மாணவர் கொலை 4 பேர் கைது; ரவுடிக்கு வலை

கல்லுாரி மாணவர் கொலை 4 பேர் கைது; ரவுடிக்கு வலை

கல்லுாரி மாணவர் கொலை 4 பேர் கைது; ரவுடிக்கு வலை

கல்லுாரி மாணவர் கொலை 4 பேர் கைது; ரவுடிக்கு வலை

ADDED : ஆக 03, 2024 07:32 PM


Google News
திருச்சி:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன், 18; திருச்சி அரசு கல்லுாரியில், முதலாம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் கல்லுாரி முடிந்து, திருச்சி, ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின், உறவினர் மகன் சந்தோஷ் என்பவருடன், காவிரி வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க, கீதாபுரம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது குடித்துக் கொண்டிருந்த கும்பல், அவர்களை தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ரஞ்சித் கண்ணன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சம்பவம் தொடர்பாக, நவீன்குமார், 23, விஜய், 23, மற்றும் 17 வயதான இரண்டு பள்ளி மாணவர்களை, ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய ரவுடி சுரேஷ், 26, என்பவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us