Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ மின்பாதை கேபிள் பழுது நடுவழியில் நின்ற ரயில்

மின்பாதை கேபிள் பழுது நடுவழியில் நின்ற ரயில்

மின்பாதை கேபிள் பழுது நடுவழியில் நின்ற ரயில்

மின்பாதை கேபிள் பழுது நடுவழியில் நின்ற ரயில்

ADDED : ஜூன் 08, 2025 02:52 AM


Google News
திருவண்ணாமலை,:மின்பாதை கேபிள் பழுதானதால், விழுப்புரம் - திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நடுவழியில் ஒரு மணி நேரம் நின்றது.

விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற மின்சார ரயில், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே, நேற்று காலை, 7:45 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென தண்டவாளத்திற்கு மேல் செல்லும் மின் பாதையிலிருந்து, ரயிலுக்கு வர வேண்டிய மின்பாதை கேபிள் பழுதானது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ரயில் நடுவழியில் நின்றது. பயணியர் அவதிக்குள்ளாகினர்.

உடனடியாக ரயில் இன்ஜின் டிரைவர், காட்பாடி ரயில்வே நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே பணியாளர்கள் விரைந்து சென்று, ரயிலுக்கு வரும், மின் பாதையை சீரமைத்தனர். இதில், ஒரு மணி நேர தாமதத்திற்கு பின், ரயில் அங்கிருந்து புறப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us