Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ மாணவனுக்கு கத்திரிக்குத்து பள்ளியில் அதிர்ச்சி

மாணவனுக்கு கத்திரிக்குத்து பள்ளியில் அதிர்ச்சி

மாணவனுக்கு கத்திரிக்குத்து பள்ளியில் அதிர்ச்சி

மாணவனுக்கு கத்திரிக்குத்து பள்ளியில் அதிர்ச்சி

ADDED : ஜூலை 05, 2025 02:45 AM


Google News
செய்யாறு:செய்யாறு அருகே பள்ளியில் சக மாணவரை கத்திரிக்கோலால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், கொருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில், 14 வயதுடைய, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் இடையே பள்ளியில், நேற்று முன்தினம் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

ஆத்திரமடைந்த ஒரு மாணவர், கையில் இருந்த கத்தரிக்கோலால், மற்றொரு மாணவரின் முகத்தில் குத்தினார்.

படுகாயமடைந்த மாணவனை ஆசிரியர்கள் மீட்டு, நாவல்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து, கத்திரிக் கோலால் குத்திய மாணவனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us