/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/சிறுமிக்கு பாலியல் தொல்லை :முதியவருக்கு 5 ஆண்டு சிறைசிறுமிக்கு பாலியல் தொல்லை :முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை :முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை :முதியவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை :முதியவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 06, 2024 05:23 PM
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்த டீக்கடை தொழிலாளி குப்புசாமி, 67, திருமணமாகாதவர். 2020 பிப்.,13ல், அதே பகுதியை சேர்ந்த, 5 வயது சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்தார். சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்று, குப்புசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி கூச்சலிட்டதால் குப்புசாமி தப்பினார். திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, குப்புசாமியை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பார்த்தசாரதி நேற்று முன்தினம் விசாரித்து, குப்புசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
* ஆரணி, பழங்காமூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஹரிகரன், 24. இவர், அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியிடம், 2022 ஜூலை, 13ம் தேதி ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். ஆரணி டவுன் போலீசார், ஹரிகரனை போக்சோவில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருவண்0ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நேற்று முன்தினம் நீதிபதி பார்த்தசாரதி வழக்கை விசாரித்து, ஹரிகனுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.