/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/திருவண்ணாமலையில் மாசி மக தீர்த்தவாரி: தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்திருவண்ணாமலையில் மாசி மக தீர்த்தவாரி: தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்
திருவண்ணாமலையில் மாசி மக தீர்த்தவாரி: தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்
திருவண்ணாமலையில் மாசி மக தீர்த்தவாரி: தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்
திருவண்ணாமலையில் மாசி மக தீர்த்தவாரி: தந்தைக்கு திதி கொடுத்த அருணாசலேஸ்வரர்
ADDED : பிப் 25, 2024 05:34 PM

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், மாசி மக தீர்த்தவாரியில் நடந்த, தந்தைக்கு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு, குழந்தை இல்லாமல், அருணாசலேஸ்வரரிடம் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தபோது, அருணாசலேஸ்வரரே அவருக்கு மகனாக பிறந்ததாக தல புராணங்கள் கூறுகின்றன. இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் மாசி மகத்தன்று, வள்ளாள மஹாராஜாவிற்கு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.
இதையொட்டி நேற்று காலை, கோவிலில் இருந்து மேள தாளங்களுடன் அருணாசலேஸ்வரர் புறப்பட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்திலுள்ள கவுதம துரிஞ்சல் ஆற்றங்கரைக்கு சென்றடைந்தார். அங்கு, சூல வடிவிலான அருணாசலேஸ்வரர், துரிஞ்சல் ஆற்றில் மூழ்கி, திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. பின்னர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, சம்மந்தனுார் கிராம மக்கள், அருணாசலேஸ்வரருக்கு சம்மந்தம் கட்டும் நிகழ்வு நடந்தது. அப்போது, பக்தர்கள் ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.