Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தொழிலாளியை பாட்டிலால் குத்தி கொன்றவர் கைது

தொழிலாளியை பாட்டிலால் குத்தி கொன்றவர் கைது

தொழிலாளியை பாட்டிலால் குத்தி கொன்றவர் கைது

தொழிலாளியை பாட்டிலால் குத்தி கொன்றவர் கைது

ADDED : அக் 10, 2025 12:22 AM


Google News
திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் வெங்கடேசன், 48, ஏழுமலை, 53. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், வானாபுரத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று இருவரும் மது வாங்கி குடித்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

ஆத்திரமடைந்த ஏழுமலை, மது பாட்டிலை உடைத்து, வெங்கடேசனை குத்தியதில் அவர் உயிரிழந்தார். வாணாபுரம் போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us