/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/திருவண்ணாமலை கோவில் உற்சவத்திற்கு நிலம் தான கல்வெட்டு கண்டுபிடிப்புதிருவண்ணாமலை கோவில் உற்சவத்திற்கு நிலம் தான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை கோவில் உற்சவத்திற்கு நிலம் தான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை கோவில் உற்சவத்திற்கு நிலம் தான கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை கோவில் உற்சவத்திற்கு நிலம் தான கல்வெட்டு கண்டுபிடிப்பு
ADDED : ஜன 11, 2024 01:10 AM

திருக்கோவிலுார்:திருவண்ணாமலை மாவட்ட, வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், பழனிச்சாமி, சிற்றிங்கூர்ராஜா ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கடம்பூர் கிராமத்தில் உள்ள வேம்பியம்மன் கோவில் எதிரில் இருக்கும் விஜய நகர சீரங்க மகாதேவர் காலத்திய கற்பலகை கல்வெட்டுக்களை கண்டறிந்து படி எடுத்தனர்.
கல்வெட்டு, 8 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. இக்கல்வெட்டின் முன்பக்கம் சூரியன், சந்திரன், திருவண்ணாமலையை குறிக்கும் சிற்பம், பெரிய அளவு சூலம் பொறிக்கப்பட்டுள்ளன. பலகையின் பின்புறத்தில் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
அதில், சீரங்க தேவ மகாராயர் உத்தரவுப்படி, செவ்வப்ப நாயக்கர் தருமமாக, வேட்டவலம் ஜமீனை சேர்ந்த தாண்டவ வாணாதிராயர், திருவண்ணாமலை திருக்கோவிலுக்கு ஆவணி மாதம் மூல நட்சத்திரம் அன்று நடக்கும் ஏழாம் நாள் விழாவிற்கு உபயமாக, முடியனுார் பற்றில் உள்ள கடம்பூர் கிராமத்தில் உள்ள நிலம் காணியாட்சியாக விடப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை கைக்கொண்டு ஒவ்வொரு வருஷமும் வேட்டவலம் வானாதிராயர் பொன்னும் நெல்லும் அளித்து திருவிழாவை நடத்தி வர வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தர்மத்துக்கு தீங்கு நினைப்பவர்கள் கங்கை கரையிலே காராம்பசுவை கொன்ற பாவத்திலே போகக் கடவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, 40 வரிகளை கொண்ட இக்கல்வெட்டு விஜயநகர அரசர் ஸ்ரீரங்க மகா தேவரின் மூன்றாம் ஆண்டில் அதாவது சக ஆண்டு 1497ளிலும், பொது ஆண்டு 1675ல் வெட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.