Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ திருவண்ணாமலை அருகே மேஸ்திரி குத்திக்கொலை

திருவண்ணாமலை அருகே மேஸ்திரி குத்திக்கொலை

திருவண்ணாமலை அருகே மேஸ்திரி குத்திக்கொலை

திருவண்ணாமலை அருகே மேஸ்திரி குத்திக்கொலை

ADDED : ஜூன் 27, 2025 03:07 AM


Google News
திருவண்ணாமலை:கட்டட மேஸ்திரி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி, 43; கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி, மகன் உள்ளனர்.

சஞ்சீவி, அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்து சென்ற போது, ஒரு கும்பல் அவரை மடக்கி, தகராறில் ஈடுபட்டு, கத்தியால் சரமாரியாக குத்தியது.

நிலைகுலைந்த சஞ்சீவி, சரிந்து விழுந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நேற்று காலை 7:00 மணியளவில் அவர் இறந்தார். திருவண்ணாமலை மேற்கு போலீசார், சந்தேகத்தில் ஐந்து பேரிடம் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us