/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ பஸ் படியில் மாணவர்கள் பயணம் கண்டித்த டிரைவருக்கு மிரட்டல் பஸ் படியில் மாணவர்கள் பயணம் கண்டித்த டிரைவருக்கு மிரட்டல்
பஸ் படியில் மாணவர்கள் பயணம் கண்டித்த டிரைவருக்கு மிரட்டல்
பஸ் படியில் மாணவர்கள் பயணம் கண்டித்த டிரைவருக்கு மிரட்டல்
பஸ் படியில் மாணவர்கள் பயணம் கண்டித்த டிரைவருக்கு மிரட்டல்
ADDED : ஜூலை 23, 2024 09:31 PM
ஆரணி:ஆரணியில், அரசு டவுன் பஸ்சில் படியில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த டிரைவருக்கு, கொலை மிரட்டல் விடுத்து, பஸ் சேதப்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கோட்டை வீதியில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 2,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி முடிந்து மாலையில் அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்வதால், மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. படியில் தொங்கியபடியும், கம்பியை பிடித்தபடியும் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், ஆரணி டவுன் பஸ் ஸ்டாண்டிலிருந்து, தவணி வழியாக இஞ்சிமேடு சென்ற பஸ்சில் மாணவர்கள், அதிகளவில் படியில் தொங்கியபடி சென்றனர். பஸ் டிரைவர் அவர்களை எச்சரித்து பஸ்சினுள் வர கூறினார். ஆத்திரமடைந்த மாணவர்கள், அவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து, பஸ்சை அடித்து சேதப்படுத்தினர். பஸ் டிரைவரும் பஸ்சை, சாலையின் நடுவே நிறுத்தினார். அப்போது பொதுமக்கள் மாணவர்களை கண்டித்தனர். இதையடுத்து, அரசு பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டினார்.