/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புத்தகம் படிக்கலாம் பின்பு... புத்தாக்கப்பயிற்சி தரலாம் முன்பு புத்தகம் படிக்கலாம் பின்பு... புத்தாக்கப்பயிற்சி தரலாம் முன்பு
புத்தகம் படிக்கலாம் பின்பு... புத்தாக்கப்பயிற்சி தரலாம் முன்பு
புத்தகம் படிக்கலாம் பின்பு... புத்தாக்கப்பயிற்சி தரலாம் முன்பு
புத்தகம் படிக்கலாம் பின்பு... புத்தாக்கப்பயிற்சி தரலாம் முன்பு
ADDED : மே 29, 2025 12:46 AM
திருப்பூர், ; 'பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு புத்தாக்கப்பயிற்சி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கோடை விடுமுறை முடிந்து, சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. புதிய வகுப்பு, புதிய பாட புத்தகங்கள், புதிய ஆசிரியர்கள், புதிய சீருடை என, எல்லாம் புதிது என்ற உற்சாகத்தில் பள்ளிக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். கல்வியாண்டின் துவக்க நாளில் இருந்தே, ஏட்டுக்கல்வியை போதிப்பை காட்டிலும், குறைந்தது, இரு வாரங்களாவது, வாழ்க்கைக்கல்விக்கான புத்தாக்கப் பயிற்சியை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.அதற்கு காரணம், மொபைல்போன்களின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் மாணவர்கள், தங்கள் இயல்பை தொலைத்திருக்கின்றனர் என்பதுதான். பெரும்பாலான மாணவர்கள், பள்ளி பருவத்திலேயே போதை பழக்கத்துக்கு அடிமையாகி, உடல், உள்ளம் பாதிக்கப்பட்டு, மனதளவில் சிதைந்து போயுள்ளனர்.இதனடிப்படையில் தான், கேரளாவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, முதல் இரு வாரங்களுக்கு, மாணவர்கள் புத்தகங்களை கொண்டு செல்ல தேவையில்லை; அவர்களுக்கு சமூக பிரச்னைகள் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்படும் என்று, அண்டை மாநிலமான கேரளா அறிவித்துள்ளது.----