/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா
பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா
பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா
பரபரப்பு வாழ்க்கை நடுவே 'அமைதி' உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைக்கும் யோகா
ADDED : ஜூன் 20, 2025 11:49 PM

அறிவியல் தொழில்நுட்பமும், மருத்துவ வசதிகளும் எந்தளவு வளர்கிறதோ, அந்தளவு வாழ்க்கை ஓட்டத்தில் பரபரப்பும், மன உளைச்சலும் அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மை. கட்டுப்பாடில்லா உணவுப்பழக்கம், ஓய்வில்லா உழைப்பு உள்ளிட்ட பல காரணங்களால், இளம் வயதிலேயே பல்வேறு நோய்களும் வந்து விடுகின்றன.மருத்துவம், அறிவியல்... இவற்றையெல்லாம் கடந்து, உடலும், மனமும் ஆரோக்கியத்துடன் இருக்க, யோகா பயிற்சி பேருதவி புரிகிறது. உடல் - மனம் - ஆன்மா ஒருங்கிணைப்புதான், இதில் உள்ள நுணுக்கம்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த யோக கலை கற்றுத்தரும் பயிற்சி மையங்கள், இன்று, நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றன. ஏராளமான பயிற்சியாளர்களும் உருவாகிவிட்டனர். சிறு பிள்ளைகள் துவங்கி பெரியவர்கள் வரை யோகா கற்றுக்கொள்கின்றனர். பிரதமர் மோடி, யோக கலைக்கு அளித்த முக்கியத்துவமும், சர்வதேச யோகா தினம் என்ற அங்கீகாரம் கிடைத்ததும் அக்கலையின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது.
- இன்று(ஜூன் 21) சர்வதேச யோகா தினம்
- நமது நிருபர் -