Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குவாரி மீது நடவடிக்கை பாயுமா?

குவாரி மீது நடவடிக்கை பாயுமா?

குவாரி மீது நடவடிக்கை பாயுமா?

குவாரி மீது நடவடிக்கை பாயுமா?

ADDED : ஜூன் 22, 2025 11:51 PM


Google News
திருப்பூர்: காங்கயம், பழைய கோட்டையில் குட்டபாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு கல் குவாரியில் தாராபுரம் ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார். அதில், 65,570 கன மீட்டர் அதிகமாக தோண்டி கனிமவளங்களை வெட்டி எடுத்துள்ளது தெரியவந்தது.

தொடர்ந்து, 2 கோடியே, 83 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் காங் கயம் தாசில்தார் அலுவலகத்தில் அளித்த மனு:

குட்டபாளையத்தில், அனுமதி பெறாத இடத்தில் நிறுவனத்தினர், 65 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு, கற்களையும், கிராவலையும் வெட்டி எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோதமாக வெடி மருந்து வினியோகம் செய்த நிறுவனம் மீதும் நடவடிக்கை தேவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us