Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எங்கெங்கு நோக்கினும் கண்ணனே... திருப்பூர் பெருமாள் கோவிலில் 15ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

எங்கெங்கு நோக்கினும் கண்ணனே... திருப்பூர் பெருமாள் கோவிலில் 15ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

எங்கெங்கு நோக்கினும் கண்ணனே... திருப்பூர் பெருமாள் கோவிலில் 15ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

எங்கெங்கு நோக்கினும் கண்ணனே... திருப்பூர் பெருமாள் கோவிலில் 15ம் தேதி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

ADDED : செப் 01, 2025 10:49 PM


Google News
திருப்பூர்; ஹிந்து அறநிலையத்துறை, திருவடித் திருத்தொண்டு அறக்கட்டளை மற்றும் கவிநயா நாட்டியாலயா சார்பில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, திருப்பூரில் நடக்கிறது.

'எங்கெங்கு நோக்கினும் கண்ணனே' என்ற தலைப்பில், கண்ணன் திருவிழா, இசை நிகழ்ச்சியுடன் கூடிய பரத நாட்டிய நிகழ்ச்சி, 15 ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நடக்க உள்ளது.

இரண்டு வயது முதல் குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதையாக வேடமிட்டு, விழாவில் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், பரிசு வழங்கப்படும். பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.

குடும்பத்தில் ஒருவர் மட்டும் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள், வரும், 12ம் தேதிக்குள் 95436 11112 என்ற எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us