Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'தை பிறந்தால் வழி பிறக்கும்'

'தை பிறந்தால் வழி பிறக்கும்'

'தை பிறந்தால் வழி பிறக்கும்'

'தை பிறந்தால் வழி பிறக்கும்'

ADDED : ஜன 08, 2024 01:38 AM


Google News
வாழ்வாதாரமாகவும், விதையாகவும் வாழ்வோம்

விளை நெல் வாழ்வாதாரமாகும்; அடுத்த விதைப்புக்கு விதை நெல்லுமாக இருக்கும்.

உழவர்கள் தாம் உழைத்துப் பாடுபட்ட பொருளையெல்லாம், துன்பத்தில் உழலும் இயலாத வறியவர்க்குப் பகிர்ந்து கொடுப்பதாலும், இல்லாதவர்கள், இயலாதவர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரம் தரும் வழி பிறப்பதாலும்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழி பிறந்தது.

மகாகவி பாரதியாரோ, 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்கிறார்.

'வளம்பெற வழக்கமான யுத்திகள் போதாது'

-----------------------------------

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம்பிக்கையுடன், பின்னலாடை தொழில்துறையினர் உள்ளனர்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:

பல்வேறு சிரமங்களை சுமந்தபடி, பின்னலாடைகளை உற்பத்தி செய்தாலும், அதற்கு பிறகு விற்பனை செய்வதில் பல்வேறு சவால்கள் நீடிக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் அனைத்து உள்நாட்டு சந்தைகளிலும் தங்கள் பொருட்களை விற்கின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள், அனைத்து மாநிலங்களுக்கும் செல்வதில்லை. மத்திய, மாநில அரசுகள் உதவியுடன், உற்பத்தியாகும் பொருட்களை உள்நாட்டிலேயே அதிக அளவு விற்பனை செய்யும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்:

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது, திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு நன்றாக பொருந்தியுள்ளது. அதற்கு பிறகே, கோடைக்கால ஆர்டர் வரத்து உறுதியாகும். வழக்கமான பருத்தி நுாலிழை பின்னலாடை உற்பத்தியை மட்டும் தொடராமல், மறுசுழற்சி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வாயிலாக, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு, ஒட்டுமொத்த திருப்பூரும் தயாராக வேண்டும்; அதற்கான முயற்சிகளை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மேற்கொண்டு வருகிறது.

----

மூவரின் படம் வைக்கவும்

புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுங்கள்!

பின்னலாடை வர்த்தக ஆலோசகர் கிரீஷ்:'டி-சர்ட்' உள்ளிட்ட பின்னலாடை தயாரிப்பில், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பருத்தி மற்றும் செயற்கை நுாலிழை பயன்படுத்தப்படுகிறது. மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், ஒரு 'டி-சர்ட்' தயாரிக்க, 457 லிட்டர் தண்ணீர் பயன்பாடு குறைகிறது; 45 கிலோவாட் மின்சார பயன்பாடும் தவிர்க்கப்படுகிறது. வாகன போக்குவரத்தும், 42.83 கி.மீ., சேமிக்கப்படுகிறது. 'பழையன கழிதல்' என்பதை, பழைய தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் என, பின்னலாடைத் தொழில்துறையினர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னல் துணியை வெட்டி தைக்கும் போது, கழிக்கப்படும் 'வேஸ்ட்'டில் இருந்து, மீண்டும் நுால் தயாரித்து, துணியாக மாற்றும் தொழில்நுட்பம் தற்போது, பல்வேறு படிநிலையில் செலவுகளை குறைத்துள்ளது.அந்தவகையில், திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையினர், புதிய தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும்; பழைய அம்சங்களை அப்படியே கழிக்காமல், அவற்றில் இருந்து உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகளும், ஆராய்ச்சியும் அவசியம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us