/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!
பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!
ADDED : ஜன 11, 2024 07:06 AM
திருப்பூர் : பொங்கலை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக, திருப்பூர் மாவட்டத்துக்கு 6.15 லட்சம் சேலை; 5.95 லட்சம் வேட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி - சேலை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் வாரியாக, தேவைப்படும் வேட்டி - சேலை எண்ணிக்கை விவரங்கள் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக, திருப்பூர் மாவட்டத்துக்கு, 6 லட்சத்து 15 ஆயிரத்து 55 சேலை; 5 லட்சத்து 95 ஆயிரத்து 341 வேட்டி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு ஒதுக்கீடு செய்த வேட்டி - சேலைகள் வந்து சேர்ந்துள்ளன.
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வினியோகம் நேற்று முதல் துவங்கியுள்ளது. வருவாய்த்துறை மூலம், அந்தந்த ரேஷன்கடைகளுக்கு வேட்டி, சேலை அனுப்பி வைக்கப்பட்டு, ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.