Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வந்தாச்சு!

ADDED : ஜன 11, 2024 07:06 AM


Google News
திருப்பூர் : பொங்கலை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக, திருப்பூர் மாவட்டத்துக்கு 6.15 லட்சம் சேலை; 5.95 லட்சம் வேட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி - சேலை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் வாரியாக, தேவைப்படும் வேட்டி - சேலை எண்ணிக்கை விவரங்கள் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்காக, திருப்பூர் மாவட்டத்துக்கு, 6 லட்சத்து 15 ஆயிரத்து 55 சேலை; 5 லட்சத்து 95 ஆயிரத்து 341 வேட்டி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு ஒதுக்கீடு செய்த வேட்டி - சேலைகள் வந்து சேர்ந்துள்ளன.

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வினியோகம் நேற்று முதல் துவங்கியுள்ளது. வருவாய்த்துறை மூலம், அந்தந்த ரேஷன்கடைகளுக்கு வேட்டி, சேலை அனுப்பி வைக்கப்பட்டு, ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us