ADDED : பிப் 09, 2024 11:34 PM
உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். போதிய வசதி இல்லாததால், அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
நடைபாதை முழுவதும், அருகிலுள்ள கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறுகலான இடத்தில், நிற்பதற்கு கூட இல்லாமல், மக்கள் தவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம், தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி, போதுமான இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.